internet

img

வலைப் பேச்சு

இலங்கை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி விலகியிருக்கிறார். மும்பையில் 2011இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் மகராஷ்டிர மாநிலமுதல்வரும், மத்திய உள்துறை அமைச்சரும் பதவி விலகினர். ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு உளவுத் துறையின் தோல்வியை யாரும் கடுமையான கேள்விகளுக்குள்ளாக்கவில்லை. அரசாங்கத்தைச் சேர்ந்த யாருக்கும் இதில் பொறுப்பில்லையா?


- விஜயசங்கர் ராமச்சந்திரன்


****************

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி 

பேச பேச....

ரோடு இல்லை ...

பஸ் வசதி இல்லை....

கரண்ட் வசதி இல்லை .....

என நீண்டுக்கொண்டே போகிறது அவர் அனுபவித்த அவலங்கள். 

அவர் பேச பேச நெஞ்சம் பதறுகிறது. தமிழ்நாட்டு கிராமங்களின் அவல நிலை கண் முன்னே காட்சிகளாய் விரிகிறது

''நான் சாப்பிடவேண்டும் என்பதற்காக, மாட்டிற்கு வைக்கும் தீவனத்தை உண்டார் என் தந்தை'' என நினைவுக் கூர்ந்து..,

""...என் தந்தை மட்டும் இருந்தி ருந்தால்..." என அவர் கலங்கி அழும் போது

 நம் கண்களிலும் கண்ணீர் 

கோமதி !!

இனி நீ அழவேண்டாம் அம்மா !

ஆனால், பேசு !!

பேசு மகளே... பேசு!!

உன் மனம் ஆற நீ பேசு !

திரை விலகி,

இருள் விலகட்டும்.

உண்மை புலப்படட்டும்.

திறமையானவர்கள் ஒளிரட்டும்!

- ஆரணி டி.ரேவதி


****************


எனக்கு சொந்தமாக காரோ இரு சக்கர வாகனமோ இல்லை - மோடி உருக்கம்

சொந்தமா விமானம் வாங்குற அளவுக்கு

காசு வச்சி இருக்கவருக்கு இதெல்லாம் எதுக்கு ஜி!!

- சுபாஷ் சந்திரன்

;